பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது இணைவார்கள்?? வெண்பாவின் சித்தப்பா வந்து அனைத்து உண்மைகளையும் சொன்னால் அடுத்து என்ன நடக்கும்?? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவினால் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்த பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் அவரவர் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்த்த சமயத்தில் அப்படியே நிலைமை தலைகீழானது. பாரதி அவரது உடைமைகளை கண்ணம்மா வீட்டிலேயே விட்டு சென்றார். அதனை திருப்பி கொடுக்க கண்ணம்மா பாரதி வீட்டிற்கு சென்றார்.அப்போது சௌந்தர்யா இதோடு எல்லாத்தையும் முடிந்து கொள்ள போகிறாயா என கேட்டதற்கு எனது குழந்தைகளுக்கு கண்டிப்பாக அப்பா வேண்டும், இவர் தான் என் குழந்தைகளுக்கு அப்பா என்பதை ஊரறிய தெரியப்படுத்துவேன் என கூறியுள்ளார்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை பாரதி கவனித்து கொண்டிருப்பார். வெண்பாவின் சித்தப்பாவும் பாரதியிடம் அனைத்து உண்மைகளையும் கூற போகிறார். உன் உடம்பில் எந்த குறையும் இல்லை. வெண்பா தான் ரிப்போர்ட்டை மாற்றி வைத்துள்ளார் என அனைத்து உண்மைகளையும் போட்டு உடைக்க போகிறார்.
உண்மைகள் அனைத்தும் தெரிந்த பின்பு பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் தெலுங்கு சீரியல் அப்டேட்டின் படி வெண்பாவின் சித்தப்பா பாரதியிடம் உண்மையை கூற போகும் கடைசி நேரத்தில் வந்து வெண்பா தடுத்து விடுவாராம். இப்போதைக்கு பாரதிக்கு உண்மை தெரிய கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்