நடிகை பாவனா கடத்தல் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம் – 10 நாள் காலக்கெடு அளித்த உயர்நீதிமன்றம்!!

0

மலையாள நடிகையான பாவனாவை கடத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது புதிய குற்றவாளிகளை விசாரிக்க 10 நாள் அவகாசம் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவு

2017ஆம் ஆண்டு கேரளாவில் நடிகை பாவனாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றத்தில் மலையாள நடிகரான திலீப்புக்கும் தொடர்பு உள்ளதாக கூறி இவரும் கைது செய்யப்பட்டார். இதற்கு பிறகு திலீப்குமார் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் இந்த வழக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த குற்றத்தில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் குற்றத்தில் பல்சர் சுனியுடன் இணைந்து திலீப்பும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த குற்றத்திற்கான புதிய குற்றவாளிகளை விசாரிக்க அனுமதிக்க கூறி கேரள நீதிமன்றத்திற்கு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இந்த சாட்சிகளுக்கு சம்மந்தப்பட்ட சிலர் வெளி மாநிலங்களில் வசித்து வருவதால் அவர்களை விசாரிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்றம் இவர்களின் கோரிக்கையை ஏற்று புதிய குற்றவாளிகளை விசாரிக்க 10 நாள் அவகாசம் கொடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here