பாரதியால் குடி போதைக்கு அடிமையாகும் வெண்பா – அடுத்து நடக்க போகும் விபரீதம் என்ன?? வெளியான அடுத்த ட்விஸ்ட்!!

0

பாரதி கண்ணம்மா தொடர் பல வருடங்களாக அரைத்த மாவையே அரைக்கும் கதையை கொண்டிருந்தாலும், ட்விஸ்டுகள் கொடுக்க ஒரு நாளும் தவறியதில்லை. ‘பாரதிக்கு கண்ணம்மா நீயெனக்கு உயிரம்மா’ அப்படின்னு டூயட் பாடி காதல் செய்த காட்சிகள் எல்லாம் ஆரம்பத்தில் வேற லெவல் ஹிட் கொடுத்தது.

அந்த காதல் மழையில் பேரிடியாக வந்தவர் தான் வில்லி வெண்பா. வானிலை இடிக்கு கூட ஒரு எண்டுகார்டு இருக்கும் போல, வெண்பாவுக்கு முடிவே இல்லையா என்ற நக்கலுக்கு சரக்கு பாட்டிலால் பதிலடி கொடுத்துள்ளார். இந்த சீரியல் வெண்பாவை கொண்டு தான் சூடுப்பிடித்து நகர்கிறது. இடையில் சில நாட்கள் இந்த சீரியல் அதிக விமர்சனங்களையும் பெற்றது.

ஏனெனில், முக்கிய ரோலில் நடித்து வந்த ரோஷினி இந்த சீரியலை விட்டு விலகிய பிறகு அடுத்தடுத்து கதாபாத்திரங்கள் தொடர்ந்து விலகினார்கள். இதனால் பார்க்கும் பார்வையாளர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. ஆனாலும் பட கதையெல்லாம் சுட்டு இயக்குனர் சீரியலை ஓட்டி தற்போது ஓரளவு பாக் டு பார்ம்முக்கு கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா காதல் சேப்டரில் இடஞ்சலா இருக்கும் வெண்பாவை நீக்க இயக்குனர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

அதாவது, காதல் தோல்வியில் ஆண்கள் குடிப்பது வழக்கம். ஆனால் இது வழக்கத்துக்கு மாறாக பாரதியால் வெண்பா குடி போதைக்கு அடிமையாகிறார். இது பத்தாதுன்னு வெண்பாவுக்கு பார்த்த மாப்பிளை ரோகித்தும் அவருடன் சேர்ந்து போட்டி போட்டு குடிக்கின்றனர். இதெல்லாம் பாக்குறப்போ எங்க போய் முடியப்போகுதோன்னு தோணுது. அடுத்து என்ன நடக்குதுன்னு இனி வரக்கூடிய எபிசோடுகள் பார்த்த தான் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here