பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா தன் அப்பாவை பற்றிய விஷயத்தை சொல்ல லட்சுமி தன் அப்பாவை பற்றி கண்ணம்மாவிடம் கேட்கிறார். இதனால் செய்வதறியாது கண்கலங்குகிறார் கண்ணம்மா.
பாரதி கண்ணம்மா
ஹேமா கண்ணம்மாவின் வீட்டில் சந்தோசமாக இருக்க இது லக்ஷ்மிக்கு பிடிக்காமல் போகிறது. தன் அம்மா ஹேமா மீது இவ்வளவு அக்கறையாக இருப்பதை பார்த்து லக்ஷ்மியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இன்றைய எபிசோடில் ஹேமா தன் அப்பாவை பற்றி சொல்கிறார்.
தன் அப்பா எல்லாருக்கும் உதவி செய்வார் என்றும், ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பார் என்றும் சொல்கிறார். ஆனால் தன் அப்பாவிடம் பிடிக்காத ஒன்று அவர் குடிப்பது தான். குடித்து விட்டு புலம்பி தள்ளுவார் என்று கூறுகிறார். இதனால் கண்கலங்குகிறார் கண்ணம்மா. இந்த குடி பழக்கத்தை விட்டா தான் என்ன?? என்று நினைத்து கொள்கிறார்.
மேலும் சௌந்தர்யா ஹேமா குளிக்க சென்றதும் தன் அப்பாவை பற்றி கேட்க கண்ணம்மா கண்கலங்குகிறார். அடுத்ததாக அஞ்சலி அகிலனை சமாதானப்படுத்தி கொண்டுள்ளார். அப்பொழுது சௌந்தர்யா அங்கு வர அஞ்சலி மீது கோவப்படக்கூடாது என்று எடுத்து சொல்கிறார். மேலும் சௌந்தர்யா ஹேமா இடையே மீண்டும் ஏ.சிக்காக பிரச்சனை வருகிறது.
அதாவது ஏசியை லக்ஷ்மி அதிகமாக 26 இல் வைக்கிறார். ஹேமா கம்மியாக வைத்தால் தான் ஏசி அதிகமாக வரும் என்று சொல்கிறார். ஆனால் லட்சுமி நம்புவதாக இல்லை. இதனால் இருவருக்கும் சண்டை வருகிறது. அந்த சமயம் பார்த்து பாரதி வர லக்ஷ்மியை பார்த்து விடுகிறார். இங்க எப்படி நீ என்று கேட்க ஹேமா அவரது அம்மா ஊருக்கு சென்றிருந்தாக சொல்கிறார்.
மேலும் லக்ஷ்மிக்கு ஏசியை பற்றி சொல்லி கொடுக்கிறார். அப்பொழுது கண்ணம்மாவும் அங்கு வந்து விட பாரதி லக்ஷ்மியை ஒன்றாக பார்த்து விட்டு ஷாக்காகிறார். அதன் பிறகு ஹேமா விஷயத்தை சொன்னதும் நிம்மதியடைகிறார். மேலும் ஹேமாவை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்கிறார். ஆனால் ஹேமா இன்னும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு வருவதாக சொல்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்