8 வருடங்களுக்கு பிறகு கண்ணம்மா கையால் சாப்பிடும் பாரதி – சந்தோஷத்தில் சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மா வீட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லாமல் செல்ல சௌந்தர்யா பின் தொடர்ந்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு ஹேமாவை விட்டு தனியாக இருக்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் அடுத்த நாள் கண்ணம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று யோசிக்கிறார். இதனால் அனைவரிடமும் பொய் சொல்லி விட்டு செல்கிறார். சௌந்தர்யா பாரதியை பின் தொடர்ந்து செல்கிறார்.

பாரதி பூச்செடி வாங்கி மீண்டும் வெளியே வர கார் ஸ்டார்ட் ஆகாமல் இருக்க சௌந்தர்யா அங்கு வருகிறார். பாரதி என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்து கொண்டிருக்க காரில் ஏறி அமருகிறார். அந்த பக்கம் போக வேண்டும் இந்த பக்கம் போக வேண்டும் என்று ஏதேதோ சொல்லி ஒரு இடத்தில் இறங்குகிறார்.

அப்பொழுது அங்கிருந்து ஆட்டோ பிடித்து கண்ணம்மா வீட்டிற்க்கு செல்கிறார். சௌந்தர்யா பின்னாடியே வந்து ஒளிந்து கொள்கிறார். ஹேமாவும் லக்ஷ்மியும் விளையாடி கொண்டுள்ளனர். பாரதி வர அப்பொழுது ஹேமா பாரதியை சாப்பிட சொல்லி வற்புறுத்துகிறார்.

மேலும் பூச்செடியை காட்ட கண்ணம்மாவை அழைத்து சொல்கிறார். மேலும் கண்ணம்மா பாரதியும் இணைந்து செடியை நட்டு வைக்கின்றனர். ஹேமா உப்புமா சாப்பிட சொல்லி கெஞ்சுகிறார். வேறு வழியில்லாமல் உப்புமாவை சாப்பிடுகிறார். இதனை பார்த்து சௌந்தர்யா ஷாக்காகிறார்.

வீட்டில் உப்புமா செய்தால் கொஞ்சம் கூட சாப்பிடுறதில்லை. இங்க கண்ணம்மா சமைச்சத்தும் சாப்பிடுற என்று நினைத்து கொள்கிறார். சாப்பிட்டு கைகழுவும் போது கண்ணம்மாவையே பார்த்து கொண்டுள்ளார். பாரதி வெளியே கிளம்பியதும் சௌந்தர்யா வீட்டிற்கு வருகிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here