‘உன்னையும் கண்ணம்மாவையும் நான் சேத்து வச்சு காட்றேன்’ – பாரதியிடம் சவால் விடும் சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கோலப்போட்டியில் ஜெயித்த கண்ணம்மா அந்த பணத்தை சௌந்தர்யாவிடம் கொடுத்து பாரதியிடம் கொடுக்க சொல்கிறார். அடுத்ததாக சௌந்தர்யா பாரதியிடம் உன்னையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைத்து காட்றேன் என்று சவால் விடுகிறார்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பான கதையம்சத்துடன் நகர்ந்துகொண்டுள்ளது. கோலப்போட்டியை கெடுத்துவிட வெண்பா என்னென்னவோ செய்து பார்க்கிறார். ஆனால் கடைசியில் ஜெயித்தது என்னவோ கண்ணம்மா தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரூ.1 லட்சம் பரிசு பொருளை பெற்று சென்ற கண்ணம்மா அதனை சௌந்தர்யாவிடம் கொடுத்து பாரதியிடம் கொடுக்க சொல்கிறார். அடுத்ததாக கண்ணம்மா வீட்டில் சௌந்தர்யா நினைத்து கவலைப்படுகிறார். பாரதி கையால் எதுவும் வாங்க கூடாது என்று தான் அப்படி பேசுனேன் என்று மன்னிப்பு கேட்கிறார்.

அடுத்ததாக சௌந்தர்யா பாரதிக்காக காத்துக்கொண்டுள்ளார். பாரதி வந்ததும் கண்ணம்மாவுக்கு டிரீட்மென்ட் செய்ததை பற்றி கேட்கிறார். இன்னும் உனக்கு கண்ணம்மா மேல் பாசம் இருக்க தானா செய்கிறது என்று சொல்ல அதெல்லாம் ஒன்றும் இல்லை.

நடிகர் கமலின் ‘விக்ரம்’ பட டீசர் – 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!!

ஒரு டாக்டரா என்னோட கடமையை செஞ்சேன் என்று சொல்கிறார். அடுத்ததாக கண்ணம்மா கோலப்போட்டியில் ஜெயித்ததையும், அதில் வென்ற 1 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டதாகவும் சொல்கிறார். கோவமடையும் பாரதி அதனை வாங்கிக்கொண்டு செல்கிறார். மேலும் உன்னையும் கண்ணம்மாவையும் கூடிய சீக்கிரம் நான் சேர்த்து வச்சு காட்றேன்.

இது என்னோட சவால் என்றும் கூறுகிறார். பாரதி இது கண்டிப்பாக நடக்கவே நடக்காது, நீங்க தோத்து தான் போவீங்க என்று கூறுகிறார். அதன் பின் நடந்தவற்றை வேணுவிடம் சொல்கிறார் சௌந்தர்யா. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here