லட்சுமியின் கதறலில் கண்முழிக்கும் கண்ணம்மா – பாசப்போராட்டங்களுடன் பாரதி கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ஓரளவிற்கு உடல்நலம் சரியானத்திற்கு பிறகு அம்மாவை பார்க்க கதறிக்கொண்டு ஓடி வருகிறார். லட்சுமி கதறலை கேட்டு கண்ணம்மா கண்முழிக்கிறார். தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்கிறார் கண்ணம்மா.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. தொடர்ந்து கண்ணம்மா உயிருக்கு போராட பாரதி எப்படியோ காப்பாற்றுகிறார். மேலும் வெண்பா கொடுத்த மருந்தை பார்க்க ஷாக்காகி இது விஷ மருந்து என்று துளசி இடம் கூறுகிறார்.

ஆக மொத்தம் கண்ணம்மாவின் உயிரை காப்பாற்றி விடுகிறார் பாரதி. மேலும் பாரதிக்கு கண்ணம்மா மேல் ஆரம்பத்தில் இருந்த பாசம் கொஞ்சம் இருக்க நீ உயிரோடு இருந்தால் போதும் என்று கண்கலங்குகிறார். துளசியிடமும் கண்ணம்மாவை நன்றக பார்த்துக்கொள்ளும்படி சொல்லுகிறார்.

அதன் பிறகு லட்சுமி கண்ணம்மாவை தேடி ஓடி வருகிறார். அம்மாவிற்கு என்ன ஆனது என்று துளசியிடம் கதறுகிறார். கண்ணம்மாவை உள்ளே சென்று பார்க்க லட்சுமி அழும் சத்தத்தில் கண்ணம்மா சுயநினைவிற்கு வருகிறார். லட்சுமியை பார்த்து கட்டி அணைக்கிறார் கண்ணம்மா.

பிபிசி சேனலுக்கு சீன அரசு தடை – அமெரிக்கா கண்டனம்!!

கண்ணம்மா கண் முழித்த சந்தோஷத்தில் அனைவரும் உள்ளனர். அதன் பிறகு கண்ணம்மா ஹவுஸ் ஓனரை காட்டுகின்றனர். குடித்து கொண்டு கல்யாணம் ஆன புகைப்படத்தை பார்த்துக்கொண்டுள்ளார். பழைய படி மனைவியை சந்தேகப்பட்டு வன்மத்தை வளர்ந்துக்கொள்கிறார்.

அடுத்ததாக அவரின் மனைவி குழுவில் கட்டி சேர்த்து கொண்டு வந்த பணத்தை அவரிடம் தர எந்த வேலை பார்த்து இந்த காசு வந்தது என்று பெல்டால் அடித்து சித்திரவதை செய்கிறார். அடுத்ததாக சௌந்தர்யா போட்டோ உடைந்ததையே நினைத்து வருத்தப்படுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரதி அங்கு வர நடந்த விஷயத்தை சொல்லுகிறார். வழக்கம் போல எரிச்சலடைந்த உள்ளே செல்கிறார் பாரதி. கண்ணம்மா கண் முழித்ததால் டிஸ்சார்ஜ் ஆகி செல்கிறார். துளசியிடம் எவ்வளவு செலவு ஆனது என்று கேட்க அப்பறம் பார்த்து கொள்ளலாம் என்று அழைத்து செல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here