வெண்பா கொடுத்த விஷ மருந்தை கண்டுபிடிக்கும் பாரதி – உயிர் பிழைப்பாரா கண்ணம்மா??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா உயிருக்கு போராடி வரும் நிலையில் தற்போது பாரதி கண்ணம்மாவை காப்பாற்றுகிறார். இன்றைய எபிசோடில் வெண்பா கொடுத்த விஷ மருந்துகள் பற்றி கண்ணம்மாவிற்கு தெரிய வருகிறது.

பாரதி கண்ணம்மா

தொடர்ந்து வெண்பா கொடுத்த விஷ மருந்தால் கண்ணம்மாவின் உடல்நிலை படுமோசமாகிறது. பாரதி கண்ணம்மாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர துளசி கெஞ்சி கேட்டதால் அவருக்கு உதவியும் செய்கிறார். தொடர்ந்து கண்ணம்மாவின் நிலை மோசமாகிறது.

மூன்றாவது நாளாக குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

வீட்டில் சௌந்தர்யா கண்ணம்மாவை நினைத்து பதட்டமடைகிறார். லட்சுமி இன்னும் அம்மா வீட்டிற்கு வராததை நினைத்து என்ன ஆனதோ என்று கவலையடைகிறார். இன்றைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு மருந்தை கொடுக்கிறார் பாரதி. ஓரளவிற்கு மூச்சு திணறலில் இருந்து விடுபடும் கண்ணம்மா மயக்கமாகிறார்.

கண்ணம்மாவின் நிலையை பார்த்து கண்கலங்குகிறார் பாரதி. ஒருநாளும் நீ உயிரோட இருக்க கூடாதுனு நான் நினைக்கவே இல்லை. உன் குழந்தை அனாதையாகணும்னு கூட நான் நெனச்சது இல்லை. இப்போ நீ உயிரோட வந்தா போதும் என்று கண்ணம்மாவின் கையை பிடித்து கண்கலங்குகிறார்.

கண்ணம்மாவும் மயக்கத்தில் மாமா என்று அழைக்க பாரதி திணறித்தான் போகிறார். அடுத்து துளசி உள்ளே வர கண்ணம்மாவின் நிலையை பற்றி விசாரிக்கிறார். இனி எந்த ஆபத்தும் இல்லை என்று கூறியதும் தான் துளசிக்கு உயிரே வருகிறது.

பாரதி கண்ணம்மா எடுத்து கொண்ட மாத்திரையை காட்ட சொல்லுகிறார். துளசியும் அதனை காட்ட எல்லா மாத்திரைகளையும் பார்த்து அதிர்ச்சியாகிறார். இது மிகவும் டேஞ்சரான மாத்திரை இதை யார் இவங்களுக்கு கொடுத்தது என்று கேட்கிறார். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் கண்ணம்மாவின் உயிருக்கே ஆபத்து என்றும் கூறுகிறார்.

மேலும் துளசியிடம் கண்ணம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ளும் படியும் சொல்லிவிட்டு செல்கிறார். மேலும் வீட்டில் உள்ள வேலைக்காரியை வைத்து துர்காவிடம் இருக்கும் ஆதாரத்தை அளிக்க திட்டமிடுகிறார் வெண்பா. வேலைக்காரி பிரசவ வலியுடன் துடிப்பது போலவும் துர்கா ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வேகமாக வெண்பாவை உதவிக்கு அழைக்கிறார் துர்கா. ஆனால் மொபைலில் உள்ள ஆதாரத்தை அழித்தால் தான் வருவேன் என்று மிரட்ட அனைத்தையும் அளித்து விடுகிறார். அதன் பிறகு நடந்த ட்ராமாவை கூற துர்கா கடுப்பாகிக்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here