பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கும்?? என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். கண்ணம்மாவிற்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததை அடுத்து துளசி அவரை வீட்டிற்கு அழைத்து சென்று தங்க வைக்கிறார். கண்ணம்மா தன் வாழ்கை கதையை கூற துளசியும் தன் வாழ்க்கையை பற்றி கூறுகிறார். மேலும் கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு சென்று டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லி சண்டையிடுகிறார்.
பாரதி கண்ணம்மா
முன்தைய எபிசோடில் சௌந்தர்யா குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். அனைவரும் இது கண்ணம்மாவின் குழந்தையாக இருக்குமோ என்று சந்தேக படுகின்றனர். இந்நிலையில் குழந்தையை பாரதியிடம் விட்டு செல்கிறார் சௌந்தர்யா. குழந்தையின் அழுகையை கேட்டு பாரதியால் தாங்க முடியாமல் தூக்க செல்ல பின்பு தன் ஈகோவால் அப்படியே விட்டு செல்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை பார்த்த சௌந்தர்யா இவன் எப்பொழுது மாறுவான் என்று கண்கலங்குகிறார். இதனிடையே கண்ணம்மாவின் கதையை பற்றி கேட்கிறார் துளசி கண்ணம்மா நடந்தவற்றை கூறி பாரதியின் புகைப்படத்தையும் காட்டுகிறார். அப்பொழுது தான் துளசிக்கு நியாபகம் வருகிறது பாரதி தான் பிரசவம் பார்த்தார் என்று. இதனை கண்ணம்மாவிடம் சொல்லலாமா?? வேண்டாமா?? என்று யோசிக்கிறார்.
அதன் பிறகு கண்ணம்மா துளசியை பற்றி கேட்க தான் அப்பா இல்லாமல் பட்ட கஷ்டத்தை கூறி அழுகிறார். இதனால் கண்ணம்மாவிற்கு அப்பா இல்லாமல் தன் குழந்தையின் வாழ்க்கையும் இப்படி ஆகி விடுமோ என்று பயப்படுகிறார். இதனால் அங்கிருந்து கண்ணம்மா குழந்தையை எடுத்து கொண்டு பாரதியின் வீட்டிற்கு செல்கிறார்.
ஆனால் பாரதி கண்ணம்மாவை பார்த்து கோவமடைகிறார். காசு இல்லைனு இங்க வந்துருக்கியா?? என்று இழிவாக பேசுகிறார். மேலும் கண்ணம்மா இந்த குழந்தை உன்னுடையது தான் என்று ஒத்துக்கொள் என்று சண்டையிடுகிறார். ஆனால் பாரதி அதை நம்ப மறுக்கிறார். மேலும் கண்ணம்மா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும்வரை இங்கு இருந்து போக மாட்டேன் என்று அங்கேயே உட்காருகிறார். அப்பொழுது அகில் நடந்தவற்றை சௌந்தர்யாவிடம் நடந்தவற்றை கூற சௌந்தர்யா பதட்டமடைகிறார்.
மேலும் தான் வரும் வரையில் கண்ணம்மா அங்கே இருந்து செல்லாமல் பார்த்துக்கொள் என்றும் கூறுகிறார். மேலும் அஞ்சலி கண்ணம்மாவிடம் வம்பிழுக்க கண்ணம்மா கண்டபடி பேசுகிறார். பாரதி கண்ணம்மாவை பார்த்து எனக்கு குழந்தை பிறக்காதுனு தெரிஞ்சுக்கிட்டு வருண் கூட உறவு வச்சிக்கிட்டு குழந்தை பெத்துக்கிட்ட என்று கண்டபடி பேசுகிறார். இந்த வார்த்தையை கேட்டு பாரதியின் அப்பா பாரதியை அறைகிறார். மேலும் கண்ணம்மா உன்னை எப்படி டெஸ்ட் எடுக்க வைக்கிறதுனு எனக்கு தெரியும் என்றும் கூறி அங்கிருந்து செல்கிறார். இந்த எபிசோடை வைத்து பார்க்கும்போது கூடிய விரைவில் பாரதிக்கு உண்மை தெரிய வர வாய்ப்புள்ளது.