பாரதியிடம் உண்மையை சொல்ல வரும் துர்கா – சிக்குவாரா வெண்பா?? சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா சென்னையில் தான் எங்கோ இருக்கிறார் என்பது தெரிந்துகொண்ட சௌந்தர்யா அவரை தேடி அலைகிறார். மேலும் லட்சுமியை வேறு சந்திக்கிறார்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல பரபரப்பான கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் வேணுவிற்கு நடந்த விபத்தில் கண்ணம்மாவை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் பாரதி அசிங்கப்படுத்தியதால் அங்கிருந்து சென்று விடும் கண்ணம்மாவை அகிலனும் சௌந்தர்யாவும் இன்றைய எபிசோடில் தேடி அலைகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ரோட்டில் கண்ணம்மாவின் போட்டோவை வைத்து தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது பார்த்து லட்சுமி அங்கு வர சௌந்தர்யாவிற்கு அவரை எங்கேயோ பார்த்தது போல இருக்க லட்சுமியும் சௌந்தர்யாவை பார்த்து வருகிறார். கிராமத்தில் லட்சுமியை பார்த்தது நியாபகத்திற்கு வருகிறது. லட்சுமிக்கும் நியாபகத்திற்கு வருகிறது.

சௌந்தர்யா லட்சுமியிடம் உன் பெயர் என்ன என்று கேட்க தன் பெயரை சொல்ல மறுக்கிறார். அடுத்து லட்சுமியிடம் கண்ணம்மா போட்டோவை காட்டி யார் கேட்க அதற்குள் போன் சுவிட்ச் ஆப் ஆகி விடுகிறது. சௌந்தர்யா அங்கிருந்து சென்றதும் தான் லட்சுமிக்கு நியாபகத்திற்கு வருகிறது இது பாரதி ஓட அம்மா என்றே.

6வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

அதற்கு சௌந்தர்யா காரை எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார். அடுத்ததாக லட்சுமி ஸ்கூலுக்கு செல்ல அங்கு டீச்சரின் மகன் ஒரு குழந்தையின் பேனாவை திருடி தள்ளுவிட லட்சுமி அந்த பையனை கண்டிக்கிறார். அப்பொழுது அந்த டீச்சர் வர லட்சுமியை அதட்டி அவரின் அம்மாவை அழைத்து வர சொல்கிறார்.

அதன் பிறகு பாரதி வெண்பாவின் ஹாஸ்பிடலுக்கு வர எதிர் ஹாஸ்பிடலில் பாட்டு கேட்பதை பார்த்து உள்ளே செல்ல அங்கு துர்காவை பார்த்து அதிர்ச்சியடைகிறார். இது டிரைவர் துர்கா தானே என்று அதிர்ச்சியடைகிறார். துர்காவை நீ எப்படி டாக்டர் ஆன என்று மிரட்டுகிறார்.

ஆனால் துர்காவும் எதற்கும் சலிக்காமல் கிண்டலாக பதில் சொல்கிறார். வெண்பாவிற்கு டார்ச்சர் கொடுக்க தானே அவ ஹாஸ்பிடலுக்கு எதிரிலே இப்படி ஓபன் பண்ணி இருக்க என்று கேட்க துர்கா உண்மையை சொல்ல வருகிறார். அப்பொழுது வெண்பாவும் ஹாஸ்பிடலுக்குள் நுழைகிறார். பாரதியும் துர்காவும் பேசுவதை பார்த்து அதிர்ச்சியடையும் வெண்பா பாரதியை சமாளித்து அழைத்து செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here