ஜெயிலில் இருந்து தப்பித்து வெண்பா கழுத்தில் தாலி கட்டும் துர்கா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில், குழந்தை எதிர்பாராத விதமாக பாரதியை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றியதால் குழந்தையின் மீது பாரதிக்கு இருந்த கோவம் குறைந்து தற்போது பாசம் வருகிறது. மேலும் துர்கா ஜெயிலில் இருந்து தப்பித்து வர வெண்பா அடுத்து என்ன நடக்குமோ?? என்ற பதட்டத்தில் வீட்டில் அமர்ந்துள்ளார். மேலும் பல திருப்பங்கள் இன்றைய எபிசோடில் காத்துக்கொண்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

முந்தைய எபிசோடில் பாரதி வழக்கம் போல ஹாலில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டுள்ளார். மேலும் குழந்தையும் ஹாலில் இருக்க திடீரென அழுகிறது. இதனால் பாரதி எரிச்சலடைந்து குழந்தையை பார்க்க எழுந்திரிக்க அதே நேரம் பார்த்து ஃபேன் கீழே விழுகிறது. இதனால் பாரதிக்கு குழந்தை மீது ஒரு அபிப்ராயம் ஏற்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குழந்தையின்’ அருகில் வந்து இனி நீ தான் என் குழந்தை என்று கூறி முத்தமும் இட்டார். தற்போது கண்ணம்மா குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என துளசியிடம் கூறுகிறார். மேலும் இதனை சௌந்தர்யாவிடம் கூற அவரும் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் குழந்தைக்கு எந்த கோவிலில் பெயர் வைக்கலாம் என பாரதி கேட்க சௌந்தர்யா, கண்ணம்மா எந்த கோவிலில் வைக்கிறாளோ அங்கே தான் வைக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொள்கிறார். இந்நிலையில் துர்கா ஜெயிலில் இருந்து தப்பித்து செல்கிறார். இந்த செய்தி வெண்பாவை வந்தடையவே மிகவும் பதட்டமடைகிறார். வெண்பா ஒருவித பயத்தில் ஹாலில் அமர்ந்திருக்க பின்னால் இருந்து துர்கா வருகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் கையில் தாலியை வேறு வைத்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் வெண்பா தவித்துக் கொண்டிருக்க அவளின் நிலையை பார்த்து துர்கா கைதட்டி சிரிக்கிறார். வெண்பா எவ்வளவு கெஞ்சியும் விடுவதாக இல்லை. துர்கா வெண்பாவின் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டுகிறார். இதனை பார்த்து வெண்பா கத்த கடைசியில் அது ஒரு கனவாக முடிந்தது. இது கனவாக இருந்தாலும் வெண்பாவிற்கு பதட்டம் விடவில்லை.

அடுத்ததாக கண்ணம்மா குழந்தைக்கு டிரஸ் எடுக்க கடைக்கு செல்கிறார். குழந்தைக்கு டிரஸ் பார்த்துக் கொண்டிருந்த கண்ணம்மா குழந்தையை அங்கிருப்பவர்களிடம் கொடுத்து விட்டு உள்ளே செல்கிறார். அந்த சமயம் பார்த்து பாரதியும் குழந்தைக்கு டிரஸ் எடுக்க வர அந்த பெண்ணிடம் இருக்கும் குழந்தையை கையில் வாங்கி இந்த குழந்தையின் அளவில் டிரஸ் வேண்டும் என்று கேட்கிறார்.

அப்பொழுது சரியாக கண்ணம்மா அங்கு வர கையில் இருப்பது கண்ணம்மாவின் குழந்தை என்று தெரிந்ததும் குழந்தையை அவளிடம் விட்டுவிட்டு அங்கிருந்து கோவமாக செல்கிறார். அடுத்ததாக சௌந்தர்யா வீட்டில் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டுள்ளார்.

இப்பொழுது இரண்டு குழந்தைக்கும் ஒரே இடத்தில் தான் பெயர் வைக்கும் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. ஒருபக்கம் ஆடம்பரமாகவும், இன்னொரு பக்கம் எளிமையாகவும் பெயர் சூட்டும் விழா நடக்கவுள்ளது. இப்பொழுது பாரதியும் குழந்தையை ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் துர்கா வேறு ஜெயிலில் இருந்து தப்பித்துள்ளார். இனி வரும் அடுத்த எபிசோடுகளில் பல தரமான சம்பவங்கள் காத்துக்கொண்டுள்ளது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here