‘உங்க அம்மா என் முதுகுல குத்துனா, நீ நெஞ்சுல குத்துற’ – குழந்தையை திட்டும் பாரதி!! பரபரக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரையிலும் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும் என்று வைராக்கியமாக இருந்து வந்த கண்ணம்மா தற்போது துளசியின் கதையை கேட்டு தன் குழந்தை தந்தை இல்லாமல் வாழ கூடாது என்று பாரதியிடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் பாரதியை தேடி ஹாஸ்பிடலுக்கும் செல்கிறார்.

பாரதி கண்ணம்மா

முந்தைய எபிசோடிகளில் கண்ணம்மா மனம் மாறி பாரதியின் குழந்தை தான் என நிரூபிக்க வேண்டும் என்று போராடுகிறார். ஆனாலும் பாரதி அதனை கண்டுகொள்வதாக இல்லை. மேலும் கண்ணம்மாவை வழக்கம் போல கேவலப்படுத்தி அனுப்புகிறார். கண்ணம்மா உன்னை எப்படி டெஸ்ட் எடுக்க வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று சவால் விட்டு சென்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடந்தவற்றை அஞ்சலி அவளின் அம்மா மற்றும் பாட்டியிடம் கூற அவர்களுக்கு எதோ தப்பாக இருப்பதாக தோன்றுகிறது. இந்நிலையில் வெண்பா வேறு கண்ணம்மாவை கொலை காண்டில் தேடிக்கொண்டிருந்தார். மேலும் கண்ணம்மா பாரதியின் ஹாஸ்பிடலுக்கு சென்று குழந்தைக்கு மருத்துவம் பார்க்க வந்தேன் என்று கூறி பாரதியை சீண்டுகிறார். மேலும் குழந்தை பாரதி போலவே இருப்பதாகவும் கூறுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்றைய எபிசோடில் குழந்தை பாரதியை எட்டி உதைக்கிறது. இதனால் பாரதி ‘உங்க அம்மா என் முதுகுல குத்துனா, நீ நெஞ்சுல குத்துற’ என்று நினைக்கிறார். இதனை பார்த்த கண்ணம்மா சிரிக்கிறார். கண்ணம்மா அங்கிருந்து வெளியேறுகிறார். இதனால் அதன் பின் பாரதியின் வீட்டில் சௌந்தர்யா குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கிறார். மேலும் பாரதிக்கு கூடிய விரைவில் உண்மையை தெரியவைத்து கண்ணம்மாவிடம் சேர்த்து வைப்பதாகவும் குழந்தையிடம் கூறுகிறார்.

அதன் பின் வேணு குழந்தைக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொண்டு வருகிறார். ஆனால் அங்கு கண்ணம்மா வீட்டில் குழந்தைக்கு எதுவும் வாங்கி தர முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். குழந்தையிடம் தன்னால் இப்போதைக்கு உனக்கு எதுவும் வாங்கித் தர முடியாது. இந்த சூழ்நிலை நீடிக்காது ஒரு நாள் எல்லாமே மாறும் என்று கூறுகிறார்.

ஒரு குழந்தை ஆடம்பர வாழ்கை என வாழ, அங்கு கண்ணம்மாவிடம் வளரும் குழந்தை எதுவும் கிடைக்காமல் உள்ளது. இந்த சூழ்நிலை நீளுமா?? பாரதி கண்ணம்மாவை கூடிய விரைவில் புரிந்து கொள்ளும் நிலை ஏற்படுமா?? என்பதை வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here