மேடையில் பாரதியை கண்டபடி பேசும் கண்ணம்மா – அதிரடியாக வெளியான ப்ரோமோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதியும் கண்ணம்மாவும் பெறுவார்களா?? வெண்பா பற்றிய உண்மைகள் அனைத்துமே வெளிவருமா? என பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். தற்போது சுவாரசியமாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதியும் கண்ணம்மாவும் ஆரம்பத்தில் அவ்வளவு காதலுடன் இருந்துவிட்டு வெண்பாவின் சாதி செயலால் இப்படி பிரிந்தது இந்த சீரியலின் பெரிய ட்விஸ்ட் என்றே சொல்லலாம். மேலும் எப்பொழுது கண்ணம்மா பற்றிய அனைத்து உண்மைகளும் பாரதிக்கு தெரிந்து ஏற்றுக்கொள்வார் என பல ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திடீரென ஒரு திருப்புமுனையாக 8 வருடங்களுக்கு பிறகு என இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுநாள் வரையிலும் சௌந்தர்யா கண்ணம்மாவை தேடிக்கொண்டு தான் உள்ளார். இன்றைய எபிசோடில் கூட சௌந்தர்யா கண்ணம்மா இருக்கும் இடத்தை நெருங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

பாய் ஃப்ரண்ட் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி – கல்லூரி நிர்வாக நோட்டிஸினால் பரபரப்பு!!

தற்போது பள்ளியில் சமைத்து வேலை பார்க்கும் கண்ணம்மா ஒரு நிகழ்ச்சியிக்கள் பாரதியார் போல வேடமணிந்து பேச வருகிறார். அந்த நிகழ்ச்சியின் கெஸ்ட் பாரதி தான் என்று தெரியாமல் வரும் கண்ணம்மா அவரை பார்த்ததும் ஷாக் ஆகிறார். ஆனால் பாரதிக்கு கண்ணம்மாவை அடையாளம் தெரியவில்லை.

பாரதி கண்ணம்மாவிடம் பேசுங்கள் என்று சொல்ல கண்ணம்மா புதுமை பெண் போல மாற வேண்டியது பெண்கள் அல்ல இந்த ஆண்கள் தான். புருஷன் சந்தேகப்பட்ட அடிமையா வாழ்றதுக்கு இது அந்த காலம் இல்லை.

எதையோ பெண்கள் தனியா தன்மானத்தோடு வாழ்ந்துட்டு இருக்காங்க என்று சொல்ல பாரதிக்கு கண்ணம்மாவின் நினைவு வருகிறது. கடைசிவரை பாரதிக்கு கண்ணம்மாவை அடையாளம் தெரியவில்லை. பாரதி தான் கண்ணம்மாவிற்கு பரிசையும் தருகிறார். அந்த பரிசையும் பிடிக்காமல் வாங்கிக்கொள்கிறார் கண்ணம்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here