பாய் ஃப்ரண்ட் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி – கல்லூரி நிர்வாக நோட்டிஸினால் பரபரப்பு!!

0

ஆக்ராவில் உள்ள ஓர் பிரபல கல்லூரியில் இருந்து ஓர் அதிர்ச்சியான நோட்டிஸ் வெளியாகியுள்ளது. இந்த நோட்டிஸினால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செயின்ட் ஜான்ஸ் கல்லூரி:

அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் காதலர்கள் தினம் வர உள்ளது. இதற்காக அனைத்து காதலர்களும் காத்துகொண்டு வருகிறார்கள் என்றே சொல்லலாம். தற்போது இந்த காதலர் தினத்தை முன்னிட்டு ஆக்ராவில் இருக்கும் பிரபல கல்லூரி ஒன்று ஓர் அதிர்ச்சியான நோட்டிஸை வெளியிட்டுள்ளது. ஆக்ராவில் செயின்ட் ஜான்ஸ் என்னும் பிரபல கல்லூரி ஒன்று நடைபெற்று வருகிறது. அந்த கல்லூரியில் இருந்து ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் கல்லூரியின் பெயருடன் ஆசிஷ் என்பவர் கையெழுத்திட்ட நோட்டிஸ் வெளிவந்துள்ளளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அது என்னவென்றால் கல்லூரியில் பயிலும் மாணவிகள் வரப்போகும் காதலர் தினத்தை முன்னிட்டு கல்லூரிக்கு வரும் பொழுது தங்களது பாய் ஃப்ரண்ட் உடன் தான் வரவேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் கடைசியாக தங்களது பாய் ஃப்ரண்ட் உடன் எடுத்த புகைப்படத்தை காட்டினால் தான் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவீர்கள் என்றும் அறிவித்துள்ளது. இதனால் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ரபாடா புதிய சாதனை – குவியும் பாராட்டுக்கள்!!

இது குறித்து கல்லூரியின் ப்ரின்சிபாலுக்கு இந்த தகவலை மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய கல்லூரியின் பிரின்சிபால், எங்கள் கல்லூரியில் ஆசிஷ் என்று ஒருவர் கிடையாது. இந்த நோட்டிஸ் எங்கள் கல்லூரியின் பெயரை கெடுப்பதற்காக யாரோ செய்த செயல். எனவே மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்த நோட்டிஸை புறக்கணிக்க வேண்டும். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம். மேலும் போலீசாரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here