பசியால் குழந்தை அழுவதை பார்த்து கண்கலங்கு பாரதி – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் பாரதியிடம் குழந்தையை சௌந்தர்யா விட்டு செல்கிறார். பசியில் அழுகும் குழந்தைக்கு பாரதி பாலை கொடுக்க அந்த குழந்தை எட்டி உதைக்கிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க பாரதியிடம் போராட்டம் நடத்துகிறார் கண்ணம்மா. ஆனால் பாரதியோ இன்னும் வெண்பா மீது உள்ள குருட்டுத்தனமான நம்பிக்கையில் கண்ணம்மாவை கண்டபடி பேசி வெளியே துரத்துகிறார். இந்நிலையில் கண்ணம்மா வீட்டிற்கு போகும் வழியில் மயக்கமும் ஏற்படுகிறது.

இது எதனால் என்று கண்ணம்மா யோசிக்க பிரசவ நேரத்தில் வெண்பா விஷ ஊசியை போட சென்றது நியாபகத்திற்கு வருகிறது. ஆனால் கண்ணம்மா இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார். அதன் பிறகு கண்ணம்மாவை மருந்து வாங்க செல்கிறார். போதிய அளவு பணம் இல்லாததால் வேலையும் தேடி அலைகிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க வீட்டில் சௌந்தர்யா பாரதிக்கு குழந்தையின் மீது பாசம் வரவைக்க போராடுகிறார். இன்றைய எபிசோடில் கூட சௌந்தர்யாவின் வற்புறுத்தலுக்கு இணங்க குழந்தைக்கு வைத்தியமும் பார்க்கிறார். இந்நிலையில் அவர் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது தனியாக இருக்கும் பாரதியிடம் போன் பேச போவதாக சொல்லி குழந்தையை கொடுத்து விட்டு செல்கிறார். குழந்தை பசியில் அழுக பாரதிக்கு கண் கலங்குகிறது. மேலும் குழந்தை பாரதியை எட்டி உதைக்கிறது. இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும்போது பாரதிக்கு தன் குழந்தை என்ற உணர்வு கூடிய விரைவில் வர வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here