பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்? என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் சில அதிரடியான திருப்பங்களும் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இன்றைய எபிசோடில் பாரதியிடம் கண்ணம்மாவை பற்றி கூறி அவரை கோபமடைய செய்கிறார் வெண்பா. மேலும் நாம் கல்யாணம் செய்து கொண்டால் என்ன?? என பாரதியிடம் கேட்க கதை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
பாரதி கண்ணம்மா
கண்ணம்மாவிற்கு சௌந்தர்யா மறைமுகமாக உதவி செய்து வருகிறார். அவருக்கு தெரிந்தால் அங்கிருந்தும் சென்று விடுவாள் என்று ஆசிரமத்தில் உள்ள அனைவர்க்கும் உதவி செய்கிறார் சௌந்தர்யா. மேலும் சிசிடிவி மூலம் கண்ணம்மாவை தொடர்ந்து கண்காணித்தும் வருகிறார்.
நேற்றைய எபிசோடில் ஆசிரமத்தில் உள்ள அனைவர்க்கும் ரூ.23,000 உதவித் தொகை வழங்குகிறார். இது சௌந்தர்யாவின் வேலையாக இருக்குமோ என்று சிறிய சந்தேகம் கண்ணம்மாவிற்கு வருகிறது. ஆசிரமத்தில் வேலை பார்த்த அந்த பெண் இது நாள் வரை உணவு பொருட்களை திருடியதை கண்டறிந்து மேனேஜர் வேலையை விட்டு விரட்டுகிறார்.
இதனால் கடுப்பாகி வெளியே செல்லும் அந்த பெண் வெண்பாவிற்கு போன் செய்து நடந்தவற்றை கூறுகிறார். வெண்பாவிற்கும் இது சௌந்தர்யாவின் வேலையாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது. இன்றைய எபிசோடில் வெண்பா அஞ்சலிக்கு போன் செய்து நடந்ததை விசாரிக்க அஞ்சலியும் அனைத்தையும் அவரிடம் உளறுகிறார்.
உண்மை தெரிந்த வெண்பா பாரதியிடம் சென்று அனைத்தையும் சொல்ல முயற்சிக்கிறார். மேலும் நாம் கல்யாணம் செய்து கொண்டால் என்ன?? என்றும் கேட்கிறார். இதனால் பாரதியும் அதிர்ச்சி அடைகிறார். மேலும் தான் அன்று அவசரத்தில் அப்படி கூறியதாகவும், என் மனதில் அந்த மாதிரியான எண்ணம் எப்பொழுதும் இருந்ததில்லை என்றும் கூறுகிறார்.
வெண்பா அடுத்ததாக சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு இது வரை செய்யும் உதவிகளை கூறுகிறார். இதனால் கோவமடையும் பாரதி நேராக ஆசிரமத்திற்கு சென்று கண்ணம்மாவை பார்த்து ‘காசு வேணும்னா என் காலுல விழுந்து கெஞ்சு’ என்று இழிவாக பேசுகிறார். மேலும் சௌந்தர்யா தான் இந்த உதவிகளை செய்தது என்றும் கூறுகிறார்.
இதனால் கண்ணம்மா அந்த பணத்தை பாரதியின் முகத்தில் தூக்கி எறிகிறார். மேலும் இன்னும் குழந்தை பிறக்க அதிகபட்சம் ஒரு வாரம் தான் உள்ளது. குழந்தை பிறந்ததும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து உன் குழந்தை தான் என்று நிரூபிக்கிறேன் என்று சவாலும் விடுகிறார். அடுத்ததாக அங்கிருந்தும் வெளியேற போகிறார் கண்ணம்மா. அடுத்தடுத்து வெளிவரும் எபிசோடில் வெண்பா பற்றிய உண்மைகள் தெரிய வர வாய்ப்புள்ளது.