நகைப்பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் – ஒரே நாளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்த தங்க விலை!!

1

சென்னையில் கடந்த சில நாட்களாக சிறிது சிறிதாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் நகைக்கடை பக்கம் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

இன்றைய நிலவரம்:

கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்த காரணமாக அதன் தேவை அதிகரித்து விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் ஊரடங்கில் சிறிய பட்ஜெட்டில் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு இருந்தவர்களும் தங்க நகை விலையை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். ஆம், அந்த அளவிற்கு வரலாறு காணாத அளவு விலை அதிகரித்தது. கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சவரன் 43 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. ஏற்றம் கண்ட அளவிற்கு விலை சரியவில்லை என்றாலும் ஓரளவிற்கு குறைந்தது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்தது. இன்று சவரனுக்கு ஒரே நாளில் 1000 ரூபாய்க்கு மேல் அதிரடியாக குறைந்துள்ளது. சமீப காலமாக தங்கத்தின் விலை இந்த அளவிற்கு சரிவது இதுவே முதல்முறை.

பாரதியிடம் தன் காதலை கூறிய வெண்பா – ஏற்றுக் கொள்வாரா பாரதி?? ஷாக்கான ரசிகர்கள்!!

சென்னையில் ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 183 ரூபாய் குறைந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வியாபாரம் சற்று அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here