விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என பல எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் தற்போது விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுளளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மாவில் தற்போது அகிலனுக்கும், அஞ்சலிக்கும் பாரதியின் கல்யாண விஷயம் வேலைக்காரி மூலம் தெரியவருகிறது. இதனால் கல்யாணத்தை நிறுத்த அனைவரும் சென்றுகொண்டுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கண்ணம்மாவிற்கு இந்த விஷயம் எப்பொழுது தெரியவரும்?? வெண்பா சதித்திட்டம் நடந்தேறுமா?? இப்பொழுதாவது பாரதிக்கு உண்மை தெரியவருமா?? என பலரும் இந்த சீரியலை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விஜய் டிவி ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் பாரதி கோவிலில் தாலி கட்ட தயாராகிறார். அஞ்சலி, வெண்பா, கண்ணம்மா மற்றும் அஞ்சலியின் அம்மா என அனைவரும் கோவிலுக்கு திருமணத்தை தடுத்து நிறுத்த வந்து கொண்டுள்ளனர்.
கிட்டத்தட்ட பாரதி தாலி கட்ட பக்கத்தில் சென்றுவிட்டார். அந்த சமயத்தில் அகிலன், கண்ணம்மா அஞ்சலி அங்கு வந்து விடுகின்றனர். இதனால் வெண்பாவும், பாரதியும் ஷாக் ஆகின்றனர்.
கண்ணம்மா பாரதியை பார்த்து உன் கூட வாழணும்னு இருந்த கொஞ்சநஞ்ச அசையும் விட்டு போச்சு, என் குழந்தைக்கு நீ தான் அப்பா ஒழுங்கா நிரூபிச்சு காட்டு என்று கத்த பாரதி வழக்கம் போல அதை போய் வருண் கிட்ட கேளு என்று சொல்ல அஞ்சலியின் அம்மாவிற்கே கோவம் வருகிறது.
யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்ன, அவ பக்கத்துல தப்பான எண்ணத்தோட யார் கிட்ட வந்தாலும் அவங்களை எரிச்சிடுவா. கண்ணம்மாவை விட இந்த வெண்பா என்ன ஒழுக்கத்துல இருந்துட போறா?? என்று சொல்ல வெண்பா கோவமாக கத்துகிறார். கடைசியாக கண்ணம்மா உனக்கு இந்த கேடுகெட்டவ தான் லாயக்கு என்று காரித்துப்பிவிட்டு செல்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.