சின்னத்திரை நடிகையான சித்ராவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக திரையுலகை மிகவும் பாதித்துள்ளது என்றே சொல்லலாம். அடுத்தடுத்து சொல்ல முடியாத பல இழப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சித்ரா
முல்லை கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. பல போராட்டங்களுக்கு பிறகு சின்னத்திரையில் ஒரு நிலையான இடத்தை பிடித்த சித்ரா இப்படி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழையா?? என பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. மேலும் இவருக்கும், இவரது வருங்கால கணவரான ஹேமந்த்துக்கும் இடையே ஏதோ பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் அவர் முந்தைய நாள் சந்தோசமாக தான் இருந்துள்ளார். இதை பற்றி மணிமேகலை கூறியதாவது, இருவரும் ஒரே ரூமில் ஒன்றாக மேக்கப் போட்டுக்கொண்டிருந்தோமே, அப்போ கூட நல்லா சந்தோசமா இருந்திங்களே, 24 மணிநேரம் கூட முடியல, அதுக்குள்ள நீங்க இப்படி பண்ணுவிங்கனு நான் நெனச்சே பார்க்கல.
காலையில் எழுந்ததும் முதலில் கேட்ட செய்தி இது. இது பொய்யாக இருக்க கூடாதா?? என்று மிகவும் வேண்டினேன் என்று கூறி பதிவிட்டுள்ளார். எந்த நேரமும் மகிழ்ச்சியாகவே காட்சியளிக்கும் சித்ராவிற்கு நட்பு வட்டாரங்களும் அதிகம். யார் என்ன கலாய்த்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கும் சித்ராவிற்கு ஏற்பட்ட இந்த நிலை மிகவும் கொடுமையானது என்றே சொல்லலாம்.
மேலும் ஷிவாங்கியும் ஏன் அக்கா இப்படி பண்ணீங்க, அன்னைக்கு முழுக்க எவ்வளவு சந்தோசமாக இருந்தோம், என்று பதிவிட்டுள்ளார். சித்ராவின் இந்த இறப்பு சின்னத்திரையை மிகவும் பாதித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சித்ரா அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு இடத்தை பிடித்திருக்கிறார். சித்ராவின் ஆத்மா ஷாந்தி அடைய நானும் வேண்டிக்கொள்வோம்.