இவன் யாருன்னே தெரியாது., கண் முழித்து அமிர்தா சொன்ன வார்த்தை., சுக்கு நூறாக நொறுங்கிய கணேஷ்!!!

0
இவன் யாருன்னே தெரியாது., கண் முழித்து அமிர்தா சொன்ன வார்த்தை., சுக்கு நூறாக நொறுங்கிய கணேஷ்!!!
பாக்கியலட்சுமி சீரியலில் கணேஷ் பற்றி அமிர்தா, எழிலுக்கு எப்போது தெரிய வரும் என எதிர்பார்த்த நிலையில் இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. கணேஷ் பாக்கியாவுக்கு ஒரு மாதம் டைம் கொடுத்தார். அதற்குள் வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையை சொல்ல வேண்டும் என கணேஷ் எச்சரித்தார். ஆனால் பாக்கியாவுக்கு அடுத்தடுத்த பிரச்சனை வந்ததால் வீட்டில் சொல்ல முடியாத சூழல் உருவாகியது. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் இனி பாக்கியாவை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என நினைத்து நேரடியாக அமிர்தாவை பார்க்க செல்கிறார்.
கோவிலில் கணேஷை பார்த்த அமிர்தா அதிர்ச்சியில் மயங்கி விழுகிறார். அப்போது எழில் அவரை தாங்கிப் பிடிக்க கணேஷ் வந்து அவர் கையை எடுத்து விடுகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது கண் முழித்த அமிர்தாவிடம் கணேஷ் நடந்த விஷயத்தை சொல்வாராம். அப்போது பாக்கியா, எழில், அமிர்தா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியாமல் தவிப்பார்களாம். ஆனால் அமிர்தா இது கணேஷே கிடையாது. இவன் யாருன்னே எனக்கே தெரியாது என்று சொல்ல இருவரும் அதிர்ச்சியாவார்களாம். மேலும் அமிர்தாவின் வார்த்தையை கேட்டு கணேஷ் சுக்கு நூறாக நொறுங்கிப் போவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here