#INDvsENG டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து அணியில் குழப்பம்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வரும் 5ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. அதனால் இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்தனர். இதில் தற்போது இங்கிலாந்து அணியில் ஓர் குழப்பம் ஏற்பட்டிருப்பது போல் தெரிகிறது.

இந்தியா vs இங்கிலாந்து:

தற்போது அடுத்த மாதம் 5ம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. மொத்தம் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் வைத்து நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். மேலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது முதல் இரண்டு டெஸ்டில் மோதும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் வீரர்கள் பட்டியல் ஏற்கனவே வெளிவந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இங்கிலாந்து அணியில் குழப்பம்:

அதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான வீரர்களில் இங்கிலாந்து அணியில் பல முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஜானி பேர்ஸ்டோவிற்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் கூறுகையில், பேர்ஸ்டோ முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் இங்கிலாந்து அணியுடன் இணைவார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் முன்பு கூறியது போல் பேர்ஸ்டோ மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் தான் பங்கேற்பர் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஊடக பிரிவு கூறிவருகிறது. இதனால் சற்று குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

பழனியில் மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றிய நடராஜன் – வைரலாகும் புகைப்படம்!!

ஆனால் இந்தியாவில் உள்ள சுழற்பந்துவீச்சை பேர்ஸ்டோ அருமையாக விளையாடுவார் என்றும் அதனால் அவரை இந்தியாவிற்கு எதிரான அனைத்து தொடர்களிலும் அணியில் சேர்க்க வேண்டும் என்றும் முன்னணி வீரர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் அதன்பிறகு நடக்கவுள்ள டி 20 உலகக்கோப்பை தொடர், ஐபிஎல் தொடரில் பேர்ஸ்டோ பங்கேற்கவுள்ளதால் அவருக்கு நீண்ட டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் அவரது இந்த ஓய்வை இங்கிலாந்து கிரிக்கெட் திரும்ப பெறாது என்றும் தெரிவித்துள்ளது. இவரது ஓய்வு இங்கிலாந்து அணியை பாதிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here