என்னமா இப்படி பண்றீங்களே மா….., ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சொதப்பல்ஸ்….,கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

0
என்னமா இப்படி பண்றீங்களே மா....., 'பாக்கியலட்சுமி' சீரியல் சொதப்பல்ஸ்....,கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!
என்னமா இப்படி பண்றீங்களே மா....., 'பாக்கியலட்சுமி' சீரியல் சொதப்பல்ஸ்....,கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் டப்பிங்கின் போது தவறுதலாக சொல்லப்பட்ட பெயரை வைத்து நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ‘பாக்கியலட்சுமி’. இத்தொடர், கணவனால் கைவிடப்பட்ட பாக்கியா என்ற பெண் எந்தவொரு உதவியும் இன்று வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார் என்பது குறித்த கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் பல களேபரங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்போது, அமிர்தாவை எழிலின் பாட்டி ஏற்றுக்கொள்வாரா, பாக்கியா தனது வீட்டுக் கடனை எப்படி அடைக்கப்போகிறார் என்ற பரபரப்பான கதைக்களத்துடன் வெளியாகிறது ‘பாக்கியலட்சுமி’ சீரியல். இந்த நிலையில், ‘பாக்கியலட்சுமி’ சீரியல் டப்பிங்கில் ஏற்பட்ட சில தவறுகள் நெட்டிசன்கள் கண்களில் பட, அதனை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

தமிழக மக்களுக்கு ஜாக்பாட்., பிறந்தநாள் அதுவுமா முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் திட்டம்! குவியும் வாழ்த்து!!

அதாவது, ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கேட்டரிங் ஆர்டரை பெறும் பாக்கியா, செல்வியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். அப்போது, ராதிகா பற்றி பாக்கியாவிடம் குறை கூறும் செல்வி ராதிகா என்ற பெயரை குறிப்பிடுவதற்கு பதிலாக காவ்யா என டப்பிங்கில் உச்சரித்து விட்டார். இந்த எபிசோடு தொலைக்காட்சியில் வெளியாக, 3 வருடங்களாக சீரியலில் நடித்தும் ராதிகாவின் பெயர் தெரியவில்லையா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here