பாக்கியலட்சுமி சீரியலில் இனியா நல்ல மார்க் எடுத்தும் பாக்கியா அங்கு வராததால் அவர் மீது கோபப்படுகிறார் இனியா. பின் அங்கு நடந்த விஷயத்தை இனியாவிடம் சொல்ல அவர் சமாதானம் ஆகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் இனியாவுக்கு பிடித்த விஸ்காம் படிப்பை படிப்பதற்காக எழில் ஒரு காலேஜில் சீட் வாங்கியுள்ளார். அந்த நேரத்தில் கோபி உனக்கு NO.1 காலேஜில் BBA படிக்க சீட் வாங்கிருக்கேன் என்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த நேரத்தில் எழில், இனியா விஸ்காம் படிக்கணும் ஆசைப்படுகிறாள் என்று சொல்ல கோபி அதெல்லாம் முடியாது என்கிறார். உடனே இனியாவும் நான் விஸ்காம் தான் படிக்க போறேன் என்று சொல்ல கோபி அதெல்லாம் உனக்கு செட் ஆகாது என்று சொல்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா இனியாவுக்கு பிடிச்சத தான் படிப்பா. இனியா என்ன படிக்கப் போறான்னு அவளே முடிவு எடுத்துட்டா. யார் சொல்வதையும் கேட்க மாட்டாள் என்று பாக்கியா சொல்ல கோபி கோபப்படுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.