பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஹோட்டல் திறப்பு விழாவை நினைத்து சந்தோஷமாக உள்ளனர். இன்னொரு பக்கம் இந்த திறப்பு விழாவுக்கு மினிஸ்டர் வரக்கூடாது என்பதற்காக கோபி பல சதி திட்டங்களை தீட்டி உள்ளார். இப்படி இருக்கும் சூழலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கோபி மினிஸ்டரை திறப்பு விழாவிற்கு வரக்கூடாது என்பதற்காக பல சதி வேலைகளை செய்துள்ளார்.
இப்படி இருக்கையில் கோபி செய்த இந்த திருட்டுத்தனம் எப்படியோ ராதிகாவுக்கு தெரிந்து விடுமாம். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா கோபியிடம் சண்டை போடுவாராம். மேலும் நீங்க இத்தனை நாள் இப்படி பாக்கியாவை பழி வாங்கணும்னு நினைச்சு தான் உங்க பிசினஸ் மொத்தமும் போச்சு. ஆனா நீங்க இன்னும் இதே தப்ப தான் செஞ்சிட்டு இருக்கீங்க. இப்படி செய்ய உங்களுக்கு அசிங்கமா இல்லையா என கேவலப்படுத்துவாராம்.