தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதம் தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது மார்ச் மாத தவணை எப்போது வரும் என இல்லத்தரசிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் மார்ச் மாதத் தவணை வரும் 15ம் தேதி வங்கி கணக்கில் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதைத் தொடர்ந்து மற்றொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது தமிழக முதல்வர் நீங்கள் நலமா என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் மகளிர் உரிமை தொகை பெரும் இல்லத்தரசிகளை தொடர்பு கொண்டு பல விஷயங்களை கேட்டறிந்தார். அப்போது இல்லத்தரசிகள் பலரும் இன்னும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து கூடிய விரைவில் முதல்வர் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவாக கார்டு வழங்கி அவர்களையும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.