பாக்கியலட்சுமி சீரியல் இப்போ எதிர்பாரா பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இப்போது யாரும் எதிர்பாரா விதமாக பாக்கியாவும் ராதிகாவும் ஒன்று சேருகின்றனர். ஆனால் இந்த விஷயம் ஈஸ்வரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் கோபி, ராதிகா-பாக்கியா பேசுவதை பார்த்து பொறாமைப்படுகிறார். இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடுகளில் கோபி பேங்கில் வாங்கிய கடனை கட்ட சொல்லி ஆபீசர்கள் டார்ச்சர் செய்வார்களாம்.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் இதை கோபி கண்டுக்காமல் இருக்க வீடு தேடி வந்து விடுவார்களாம். அப்போது தான் கோபி மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளார் என ராதிகாவுக்கும், பாக்கியாவுக்கும் தெரிய வருமாம். பின் ஆபீசர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் இவன் பெரிய பிசினஸ் மேன் கிடையாது. வாங்கின கடனை கட்ட முடியாமல் திரியுற பிச்சைக்காரன் என்பார்களாம். இதைக் கேட்டு ராதிகாவுக்கு கோபம் வருமாம்.