ச்சீ., நீ இன்னும் திருந்தலயா? மீண்டும் மாலினியுடன் பேசும் செழியன்., அசிங்கப்படுத்திய ஜெனியின் அப்பா!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் முன்பு இருந்ததை விட இப்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். மேலும் ஒவ்வொரு விஷயத்திலும் கோபியை எதிர்த்து தன் அம்மாவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். இது கோபியை தவிர மற்ற எல்லோருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கையில் இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது செழியன் ஜெனியின் அப்பாவை பார்க்க ஹோட்டலில் காத்துக்கொண்டிருக்கிறார். அப்போது யாரும் எதிர்பாரா விதமாக மாலினி அங்கே வந்து விடுகிறார். பின் செழியன் நீ எதுக்கு இங்கே வந்த? உன்னால தான் என் வாழ்க்கையே போச்சு என சத்தம் போட்டுக் கொண்டிருக்க ஜெனியின் அப்பா வந்துவிடுகிறார்.
அவரிடம் மாலினி அங்கிள் நா கிளம்புறேன்னு தான் சொன்னேன். ஆனா செழியன் தான் என்ன கொஞ்சம் நேரம் இருக்க சொன்னான் என பொய் மேல் பொய் சொல்கிறார். இதனால் ஜெனியின் அப்பா,  செழியனிடம் நீ இன்னும் கொஞ்சம் கூட திருந்தலையா?? நான் உன்ன என்ன பண்றேன்னு பாரு என மிரட்டி விட்டு செல்கிறார். பின் வருத்தத்துடன் வீட்டுக்கு வரும் செழியன் தன் அம்மாவிடம் நடந்த விஷயத்தை சொல்லி கதறி அழுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here