பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியாவின் நிலைமை ரொம்பவே மோசம் என்று தான் சொல்ல வேண்டும். கணவரின் திருமணத்திற்கே சமையல் ஆர்டர் எடுத்து சமைப்பது எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது கொடுமை.
மேலும் ராதிகாவும் வீட்டில் உள்ளவர்கள் பிரஷர் செய்ய வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். அவருக்கும் கோபி மீது காதல் இருக்க தான் செய்கிறது. இப்பொழுது ராமமூர்த்தி வேறு மண்டபத்திற்கு வந்து அசிங்கப்படுத்தி விட்டு செல்கிறார்.
ராதிகா உறவினர்களுக்கு மத்தியில் கூனி குறுகி நிற்கிறார். இந்த கல்யாணம் நடக்குமா?? நடக்காதா?? என்பதே கேள்விக்குறியாக தான் உள்ளது. இதற்கிடையில் இப்பொழுது புதுவிதமாக இன்னொரு இடைஞ்சல் வந்துள்ளது. அதாவது ராஜேஷ் மண்டபத்திற்கு வந்து பிரச்னை செய்கிறார்.
இதனால் அவமானப்பட்ட ராதிகா தற்கொலைக்கு முயற்சி செய்ய போகிறார். அப்பொழுது உயிர் பிழைத்து வரும் ராதிகா தனக்கு நடந்த அவமானத்தை நினைத்து வில்லியாக உருவெடுத்து பாக்கியா, ராஜேஷை பழிவாங்க முடிவு செய்வாராம். இப்படி தான் அடுத்த கதைக்களம் நகர இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.