விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார் தான் பிக்பாஸ் ராஜு. அந்த தொடரில் நடித்து கொண்டிருக்கும் போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்று டைட்டிலை அடித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜு வீட்ல பார்ட்டி என்ற ஷோவை தொகுத்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சி வாரம் வாரம் கலை கட்டி வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டார். ஷோவில் உள்ளே நுழைந்தவுடன் ராஜூவை கட்டி வைத்து அடித்தார். அதுமட்டுமின்றி நீ தான் டைட்டில் வின்னர் ஆய்ட்டேல அப்புறம் எதுக்கு இன்னும் இங்க இருக்க.., போட படம் நடிக்க.., என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் ராஜு தனது மனைவியுடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார். தற்போது அங்கு எடுக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். நடிகர் மன்சூர் அலிகான் சொன்னதால் அவர் தொகுத்து வரும் ஷோவை தவிர்த்து வெளி நாட்டுக்கு சென்றுள்ளாரோ என்று நெட்டிசன்கள் பேச தொடங்கிவிட்டார்கள்.