இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் பெண்களுக்கான ஆசிய கோப்பை போட்டி இன்று வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பை
மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை போட்டி இன்று வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் தொடங்க உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் வங்கதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட மொத்தம் 7 அணிகள் பங்கேற்க உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த ஆசிய கோப்பை போட்டி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் 20 ஓவர் வடிவில் அரங்கேற உள்ளது. ஆசிய கோப்பை தொடருக்கான முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளனர்.
ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா., செய்வதறியாமல் முழிக்கும் இந்தியா., இனி மேலாவது மாற்றம் நிகழுமா??
இதில் இந்திய அணி கடந்த 2018 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று, வங்கதேச அணியை சமாளிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. இதனால் இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.