நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் 3,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி:
கடந்த 3 ஆண்டுகளாக கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸின் பரவல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதன் தாக்கம் இன்னும் இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ளன. வைரஸின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தற்போது இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், இறந்தவர்கள், விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 3,805 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,24,164 ஆக உள்ளன.
தமிழகத்தில் 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு.,, தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
இதையடுத்து நோய் தொற்றுக்கு புதிதாக 26 பேர் பலியாகி உள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,655 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,40,24,164 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 38,293 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து விகித்தை பொறுத்தமட்டில், இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் விகிதம் 98.73% ஆக உயர்ந்தும், உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்தும் உள்ளது. இந்த வரிசையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.09% ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.