பெத்த பொண்ண உன்னால கவனிச்சிக்க முடியல நீ எல்லாம் ஒரு அம்மாவா?? பாக்கியாவை கண்டபடி பேசிவிடும் கோபி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா செய்ததை எல்லாம் சொல்லி ஹெட் மாஸ்டர் டிசி கொடுக்கும் அளவிற்கு கோவமடைகிறார். இதனால் பாக்கியாவும், கோபியும் அவரிடம் கெஞ்சுகின்றனர்.

பாக்கியலட்சுமி

நேற்றைய எபிசோடில் இனியாவின் ஸ்கூலில் ஹெட் மாஸ்டர் கண்டபடி பேசி டிசி கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். கோபியும், பாக்கியாவும் காலில் விழாத குறையாக கெஞ்சுகின்றனர். ஆனாலும் எதையுமே கேட்பதாக இல்லை. வெளியே போங்க என்று துரத்தி விடுகின்றனர்.

கோபி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் உள்ள அனைவரும் இனியா வருவதை பார்த்து ஏன் ஸ்கூலுக்கு போகல என்று கேட்கின்றனர். டிசி கொடுத்த விஷயத்தை கோபி சொல்லியதும் அனைவரும் ஷாக்காகின்றனர்.

மேலும் இத்தனை நாள் ஸ்பெஷல் கிளாஸ் என்று சொன்னதெல்லாம் பொய் என்றும் பரீட்சை எழுதாமல் ஒரு பையனுடன் சினிமாவிற்கு போயிருக்கிறார் என்றும் சொல்கிறார். இதனை கேட்ட அனைவரும் பதட்டமாகின்றனர். உன்னை சின்ன பொண்ணுன்னு நெனச்சிட்டு இருந்தோம் இப்படி பண்ணிட்டியே இனியா என்று அனைவரும் கதறுகின்றனர்.

கோபியின் அம்மாவும் மன்னிப்பு கேட்டு டிசி வாங்க விடாமல் செய்திருக்கலாம் அல்லவா?? என்று கேட்கின்றார். எவ்வளவு கெஞ்சியும் ஸ்கூலில் கேட்பதாக இல்லை என்று சொல்கிறார். கடைசியில் குழந்தை இப்படி ஆனதற்கு காரணம் பாக்கியா தான் என்று கோபி பழி போடுகிறார். உன் பிஸ்னஸ் ஆரம்பித்ததில் இருந்து தான் இந்த பிரச்சனை என்று சொல்கிறார்.

மொத்த பழியையும் பாக்கியா மீது பழி போடுகிறார். அம்மா என்னிடம் சரியாக பேசுவதில்லை, எப்போ பாரு மசாலானு சுத்திகிட்டு இருந்தனு இனியா ஏற்கனவே சொல்லி இருக்கா. இப்படி பண்ணிட்டியே பாக்கியா அம்மானு சொல்ல உனக்கு அசிங்கமா இல்லையா?? என்று சொல்கிறார். எழில் கோபியை மிரட்டுகிறார். ஆனாலும் தொடர்ந்து பாக்கியா மீது பழி போடுகிறார்.

எல்லாத்தையும் மூட்டை கட்டிவிட்டு இனி வீட்டு வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று கூறுகிறார். மேலும் பாக்கியா செய்து வைத்த அனைத்து மசாலா பொருட்களையும் தூக்கி வீசுகிறார். இதனால் குடும்பமே கலவரமாகிறது. எவ்வளவு சொல்லியும் கோபி கேட்பதாக இல்லை. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here