விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜாராணி 2” சீரியலில் இன்று சந்தியாவை சிவகாமி திட்டுகிறார். தனியாக ஸ்வீட் சாப்பிடுவது தவறு என்றும் சுட்டி காட்டுகிறார். பின், சரவணன் சந்தியாவிடம் தனிமையில் வந்து மன்னிப்பு கேட்கிறார்.
“ராஜாராணி 2” சீரியல்
இன்று “ராஜாராணி 2” சீரியலில் சிவகாமி தனியாக சந்தியா ஸ்வீட் சாப்பிட்டது தவறு என்று சுட்டி காட்டி திட்டுகிறார். இதனால் குடும்பத்தில் மீண்டும் குழப்பம் வருகின்றது. அப்போது சரவணன் வர அவரையும் சிவகாமி திட்டுகிறார். இதனால் சரவணன் சட்டென்று அந்த இடத்தினை விட்டு செல்கிறார்.
யம்மியான “சிக்கன் நெய் ரோஸ்ட்” – செஞ்சு தான் பாருங்களேன்!!
பார்வதி தனது வேலை நன்றாக முடிந்து விட்டது என்று சென்று விடுகிறார். பின், சந்தியாவிடம் தனிமையில் சரவணன் மன்னிப்பு கேட்கிறார். அதனை சந்தியாவும் புரிந்து கொள்கிறார். ஆனாலும், சரவணன் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தோப்புக்கரணம் போடுகிறார். பின், சந்தியா தனக்கு பரிசு தருகிறேன் என்று கூறி விட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக கூறுகிறார்.
இதனை அடுத்து நாளைக்கே பரிசு வாங்கி தருவதாக சரவணன் உறுதி அளிக்கிறார். அடுத்த நாள் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் வெளியே செல்கின்றனர். அப்போது சரவணன் சந்தியாவிற்கு என்று வளையல் வாங்கி கொடுக்கிறார். இதனால் சந்தியா மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார்.
வளையல் வாங்கி தரும் போது சரவணன் பேரம் பேசுகிறார். இது சந்தியாவிற்கு ஒரு மாதிரி ஆகி விடுகிறது. அது குறித்து அவர் சரவணனிடம் கேட்கவும் செய்கிறார். அதே போல் ஒரு வியாபாரியாக இருந்து கொண்டு இப்படி பேரம் பேசுகிறீர்களே என்றும் கேட்கிறார்.
அதற்கு சரவணன் ஒரு வியாபாரி என்பதால் எனக்கு ஒரு பொருளுக்கு எவ்வளவு விலை இருக்கும் என்று எனக்கு தெரியும் என்றும் கூறுகிறார். அதனை சந்தியாவும் புரிந்து கொள்கிறார். பின், வீட்டிற்கு வந்ததும் சந்தியா பூ கட்ட விருப்பப்படுவதாக சிவகாமியிடம் கூறுகிறார். சிவகாமி முதலில் மறுத்தாலும், பின் சரி என்று கூறி விடுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின், சந்தியா அழகாக பூ கட்டியதும், அதனை அவரது தலையில் வைத்து கொள்ளுமாறு சிவகாமி கூறி சென்று விடுகிறார். இதனால் சந்தியா மிகவும் உற்சாகம் அடைந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விட்டது.