ராதிகா மேல் இருக்கும் காதலால் தற்கொலைக்கு முயற்சிக்கும் கோபி – Next கல்யாணம் தான் பாக்கியலட்சுமி அடுத்த ட்விஸ்ட்!!

0

பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ட்விஸ்டுகளை வைத்து நகர்ந்து கொண்டுள்ளது. கடந்த எபிசோடுகளின் படி பாக்கியா கோபியை வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் காதலுக்காக எந்த எல்லைக்கும் கோபி செல்வார் போல தெரிகிறது. கோபி தற்போது தற்கொலை முயற்சி வரை செல்ல போவது போன்ற ப்ரோமோ வெளிவர இருக்கிறது.

அதாவது, கல்யாணம் முதல் காதல் வரைன்னு எவ்ளோவோ காதல் கதையை படங்களில் பார்த்திருப்போம். ஆனா கல்யாணம் ஆகுற வயசுல பிள்ளைங்களை வச்சிட்டு காதல் பண்ற கதையை இந்த சின்னத்திரை பாக்கியலட்சுமி தொடருல மட்டுந்தான் பார்க்க முடியும். அந்த அளவுக்கு இயக்குனர் கதையில் பல சுவாரஸ்யங்களை கொடுத்து புகுந்து விளையாடுகிறார். ஏற்கனவே கோபியை பற்றிய எல்லா உண்மையும் ராதிகாவுக்கு தெரிய வந்தது.

இப்போ பாக்கியாவுக்கும் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்து, கோபியை வீட்டை விட்டு அனுப்பினார். கோபியும் இதான் சாக்குன்னு ராதிகாவுக்கு வலையை விரிக்க திட்டமிடுகிறார். அதில் ஒன்று தான் இந்த தற்கொலை முயற்சியும். இப்படி உனக்காகவும், நம்ம காதலுக்காகவும் உயிரை கொடுக்க கூட நான் ரெடி என்று கோபி கட்டு கதையை கட்ட போகிறார். அதனால் ராதிகாவும் மனமிரங்கி கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க போகிறார். இதற்கிடையில் கோபி பாக்கியாவை கெடுக்க என்னவெல்லாம் செய்யணுமோ எல்லாமே செய்ய போகிறார் எனவும் தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here