ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெயிலர் படத்தின், படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிறுவனம் அறிவிப்பு:
நடிகர் ரஜினி, தனது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பீஸ்ட் படத்தை நெல்சன் எதிர்பார்த்த அளவு கொடுக்காததால், ஜெயிலர் படத்தை ரஜினி நெல்சனிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை என பலரும் தெரிவித்தனர். ஆனால், அதை மாற்றும் விதமாக ஜெயிலர் படத்தை இயக்கப் போவது நெல்சன் தான் என ரஜினி அறிவித்தார்.
இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ஷூட்டிங் பிரம்மாண்டமாக துவங்கி உள்ளதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மிரட்டல் லுக்கில், கடுமைமிக்க அதிகாரியாக இருப்பது போல் ரஜினியின் முகம் காட்டப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Jailer begins his action Today!@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/6eTq1YKPPA
— Sun Pictures (@sunpictures) August 22, 2022