நேற்று நடத்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான 4வது டி 20 போட்டியில் மூன்றாவது நடுவர் சில அதிர்ச்சியான தீர்ப்பை வழங்கினார். இதனால் கடுப்பான இந்திய ரசிகர்கள் நடுவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி டி 20 தொடர்களை விளையாடுகிறது. இதில் நேற்று இந்திய மற்றும் இங்கிலாந்து அணியினர் தங்களது நான்காவது டி 20 போட்டியை விளையாடினர். இந்த போட்டியில் அசத்தலாக விளையாடிய இந்திய அணியினர் 8 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து அசத்தினார். மேலும் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் நாயகன் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சர்வதேச போட்டிகளில் தற்போது தான் அறிமுகமானாலும் அந்த அச்சம் சிறிதும் இன்றி தான் சந்தித்த முதல் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். மேலும் சர்வதேச அளவில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். நேற்று 57 ரன்கள் எடுத்த நிலையில் சாம் கரண் பந்தை சூர்யகுமார் அடித்தார்,. அந்த பந்து நேராக மாலன் கைக்கு சென்றது. ஆனால் அந்த பந்தை மலான் பிடிக்கும் பொழுது மைதானத்தை உரசியது போல் இருந்தது. இதனால் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினர். மூன்றாவது நடுவர் இதனை பார்க்கையில் பந்து மைதானத்தில் உரசியது தெரியவந்தது.
பிரபல மல்யுத்த வீராங்கனை தற்கொலை – பைனலில் தோற்றதால் எடுத்த விபரீத முடிவு!!
ஆனால் இதற்கு அவுட் என்று மூன்றாவது நடுவர் அதிர்ச்சியான முடிவை அளித்தார். இதனால் அனைவரும் கடுப்பாகினர். இதேபோல் இந்திய அணியின் சுந்தர் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்றார் . ஆனால் அந்த பந்தை இங்கிலாந்தின் அலி ரஷீத் பிடித்தார். ஆனால் இவர் பந்தை பிடிக்கையில் இவரது கால் பவுண்டரி லைனை தொட்டுவிட்டது. ஆனாலும் இதனை கவனித்த மூன்றாவது நடுவர்கள் இதற்கும் அவுட் கொடுத்து அதிர்ச்சியளித்தனர். இதனால் கடுப்பான ரசிகர்கள் ‘கண்ண எங்க வச்சிருக்கீங்க’ என்று நடுவர்களை இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.