நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓய்வூதிய நலன் கருதி அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் 18 முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள், 18 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதன்படி மாதந்தோறும் ரூ.210 முதலீடு செய்து வந்தால், 60 வயதிற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஓய்வூதியமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு குறைந்தபட்சமாக 8 சதவீத வருமானம் பெறலாம் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தெரிவித்து இருந்தார். பயன்பெற விரும்புபவர்கள் அருகாமையில் உள்ள வங்கி கிளைகளில் அடல் பென்ஷன் யோஜனா விண்ணத்தை பூர்த்தி செய்து ஓய்வூதிய கணக்கை திறக்கலாம்.