கர்நாடகாவில் 5, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பினர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த மார்ச் 22ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய ஆலோசனை மேற்கொண்டு 5, 8, 9 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த உத்தரவிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் கர்நாடக அரசின் இந்த செயல் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குவதோடு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தை சிரமப்படுத்துவதாக உள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.