சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (ஏப்ரல் 8, 9) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவ கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
Enewz Tamil WhatsApp Channel
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனு தாக்கல்.. அதிர வைக்கும் முக்கிய தகவல்!!