மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வருகிற 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை காண்பதற்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி இடங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை இந்து அறநிலையத் துறை மேற்கொண்டு வருகிறது.
இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
அந்த வகையில் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக 250 டன் A/C வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் 6,000 பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு பக்தர்கள் பலர் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.