அஸ்வின் நடித்த ”என்ன சொல்ல போகிறாய்” திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு அவர் பட விழாவில் பேசியது தான் காரணம் என படக்குழுவினர்கள் கூறியுள்ளனர்.
படக்குழுவினரை பகைத்து கொண்ட அஸ்வின்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமான அஸ்வின் தற்போது ”என்ன சொல்ல போகிறாய்” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசியது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனர்கள் எனக்கு கதை சொல்லும் போது எனக்கு திரைப்படத்தின் கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என கூறியிருந்தார்.
இதுவரை 40 பட கதையில் தூங்கிவிட்டேன் என கர்வமாக சொல்ல, முதல் படத்திலேயே இவ்வளவு ஆணவமாக பேசுகிறார் என பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி அன்று இந்த திரைப்படம் திரையரங்கங்களில் வெளியானது. எதிர்பார்த்ததை விட இந்த திரைப்படம் மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்த திரைப்படம் தோல்வியடைந்ததற்கு முழுக்க முழுக்க அஸ்வினின் ஆணவம் தான் காரணம் என படக்குழுவினர் குற்றம் சாட்டினர். இதனால் படக்குழுவினரிடம் அஸ்வின் மன்னிப்பு கேட்க வேண்டும் கூறியுள்ளனர். ஆனால் அஸ்வின் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால் படக்குழுவினர் அஸ்வின் மீது கொலை வெறியில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்