பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்த உதவி கமிஷனர் – ராஜஸ்தானில் நடந்த கொடூரம்!!

0

ராஜஸ்தான் மாநிலத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் லஞ்சமாக பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் உதவி கமிஷனர் ஒருவர் . தற்போது அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

ராஜஸ்தான்:

இன்றைய காலங்களில் மக்களை காப்பாற்றும் போலீசார் சிலர் மக்களுக்கு துன்பம் விளைவித்து வருகிறார்கள். இவர்களை போல் சிலரால் மொத்த போலீசாருக்கும் அவபெயர் தான். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓர் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஓர் பெண் அந்த பகுதி பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்கும் உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ராவிடம் புகார் அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த பெண்ணுக்கு ஆதரவாக விசாரணையை நடத்த புகாரை பெற்ற உதவி கமிஷனர் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் அதனை கொடுக்க அந்த பெண் மறுத்துள்ளார். இந்நிலையில் உதவி கமிஷனர் லஞ்சமாக அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

இதற்காக அந்த உதவி கமிஷனர் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வர சொல்லி வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த பெண் இதுகுறித்து ஊழல் தடுப்பு போலீஸ் டிஜிபி.,யிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ராவை அதிரடியாக நேற்று கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here