வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில், இதில் பங்கு பெற உள்ள 10 அணிகளுக்கான வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐயானது 15 பேர் கொண்ட இந்திய வீரர்களை அறிவித்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், டெஸ்ட் தொடரின் நம்பர் 1. பவுலராக விளங்கும் அஸ்வின், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட பல வீரர்கள் இடம் பெறவில்லை. இது குறித்து, ரசிகர்கள் பலர் வீரர்களுக்காக சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின், “வீரர்களுக்காக சண்டையில் ஈடுபடுவதை ரசிகர்கள் அடுத்த 2 மாதங்களுக்கு இடைநிறுத்த வேண்டும். உலகக் கோப்பையின் போது இந்திய அணியை ஒரு அணியாக ஆதரிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.