சனாதனம் குறித்து தவறாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., பிரதமர் மோடி பதிலடி!!!

0
சனாதனம் குறித்து தவறாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., பிரதமர் மோடி பதிலடி!!!
சனாதனம் குறித்து தவறாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., பிரதமர் மோடி பதிலடி!!!

அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்து மதத்தின் வழக்கத்தை அவமதிப்பது போல் பேசியதாக பா.ஜ.க.வினர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் நீதிபதி உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக நேற்று (செப்டம்பர் 6) நடந்த மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன்படி “எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தற்போதைய சூழலில் சனாதனம் குறித்த உண்மை தன்மையை மத்திய அமைச்சர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின் சனாதனம் பற்றி தவறாக பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.” என பிரதமர் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஐபிஎல்-லில் களமிறங்க தயாராகும் முன்னணி நட்சத்திரம்…, வெளியான மாஸ் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here