‘என் மீது நம்பிக்கை வைத்து அணியில் சேர்த்தவர்களுக்கு நன்றி’ – அர்ஜுன் டெண்டுல்கர் நெகிழ்ச்சி!!

0

நேற்று சென்னையில் வைத்து நடந்த ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலத்தில் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்தது. தற்போது இதற்கு நன்றி தெரிவித்து அர்ஜுன் டெண்டுல்கர் ஓர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அர்ஜுன் டெண்டுல்கர்:

இந்த ஆண்டு 14 வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்த ஆண்டு மெகா ஏலம் இல்லாமல் மினி ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதன்படி நேற்று மாலை சென்னையில் வைத்து இந்த மினி ஏலம் நடைபெற்றது. ஏற்கனவே இந்த ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருக்கும் தேவை இல்லாத வீரர்களை விடுவித்து தயாரான நிலையில் இருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நேற்றைய ஏலத்தில் பல வீரர்களை அனைத்து அணிகளும் போட்டி போட்டு தேர்வு செய்தனர். தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார். இவர் இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்தார். இதனை தொடர்ந்து இந்த ஏலத்தில் மும்பை அணி இவரை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கல் – மூன்றாவது இடத்தை பிடித்த இந்தியா!!

இதனை உண்மையாக்கும் வகையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு தேர்வு செய்தது. மேலும் இவரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் பக்கத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் ஓர் வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, என் மீது நம்பிக்கை வைத்து என்னை அணியில் சேர்த்த பயிற்சியாளர்கள், பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எனது நன்றி என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here