TNUSRB – சீருடை பணியாளருக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!!

0

தமிழ்நாடு சீருடை பணியாளருக்கான காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

சீருடை பணியாளருக்கான தேர்வு

தமிழக காவல்த்துறையில் காலியாக உள்ள சிறைக்காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட 11,813 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் எழுத்துத்தேர்வு கடந்த டிசம்பர் 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கல் – மூன்றாவது இடத்தை பிடித்த இந்தியா!!

தேர்வு எழுதிய 5 லட்சம் பேரில் 1:5 என்ற அடிப்படையில் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வைத் தொடர்ந்து வரும் மார்ச் 8ம் தேதி உடற்தகுதித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 41 மையங்களில் 5 நாட்களாக இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. காவலர் தேர்வில் பங்கேற்ற நபர்களின் பதிவெண்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here