மக்களவைத் தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வண்ணம் உள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்தலுக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி ஆஷா ஊழியர்களுக்கு மாதம் 750 ரூபாயும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் 500 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மேற்கு வங்க அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் இன்னும் இது போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.