இன்றைய காலகட்டத்தில் எதிர்கால தேவை கருதி பலரும் பல்வேறு விதமான முதலீட்டு திட்டங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட திட்டங்கள் இருந்தாலும், நிலையான வைப்பு திட்டங்களையே அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் பிக்ஸட் டெபாசிட் (பிஓஎஃப்டி) திட்டம், தபால் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு.., முதலமைச்சர் வெளியிட்ட அரசாணை!!!
இத்திட்டத்தில் ரூ.200க்கு மேல் தொகையை முதலீடு செய்யலாம். முதலீட்டின் கால அளவுகளான ஒன்று, இரண்டு, மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் என நிர்ணயம் செய்யலாம். அதனை பொறுத்து வட்டி விகிதம் அதிகரிக்கிறது. அதாவது 3 முதல் 5 ஆண்டுக்கான கால அளவை தேர்வு செய்தால், 7.50 சதவீத வட்டி கிடைக்கும். உதாரணமாக நிலையான முதலீடாக ரூ. 25,000 செலுத்தினால், ஒரு வருட கால அளவுக்கான வட்டியுடன் (6.90) அசலும் சேர்த்து ரூ.26,775 வரை கிடைக்கும்.