ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜோடிகளை கடந்த 5 ஆண்டுகளாக பைக் டூர் சென்று வருகின்றனர். இதுவரை அவர்கள் 68 நாடுகள் சென்றுள்ள நிலையில் கடந்த மார்ச் 1ஆம் தேதி இந்தியாவுக்கு வந்துள்ளனர். அப்பொழுது ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது 7 பேர் அவர்களை வழிமறித்து, அந்தப் பெண்ணின் கணவரை தாக்கி, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல பாடகி சின்மயி தனது X தளத்தில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில இந்தியர்கள் ஒலிம்பிக்கில் பதக்கமவெல்லும்போது அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட முடியும் என்றால், சில ஆண்கள் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டால் இந்தியர்கள் அனைவரும் வெட்கப்படவேண்டும் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூகவலைத்தங்களில் வைரலாகி வருகிறது.