தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி., இந்த தேதி முதல் தொடக்கம்., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு பயிற்சி வகுப்பை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தி வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் வரும் மே 5ஆம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடத்த இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே…, குறுகிய காலத்தில் சிறந்த பயிற்சி…, மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், வரும் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here